×

பூமி கண்காணிப்பு செயற்கை கோளை சுமந்தவாறு விண்ணில் நாளை பாயும் 'GSLV F - 10'ராக்கெட்டிற்கான கவுண்டவுன் தொடங்கியது..!!

ஸ்ரீஹரிகோட்டா: பூமி கண்காணிப்பு செயற்கை கோளை சுமந்தவாறு விண்ணில் நாளை பாயும் GSLV F - 10 ராக்கெட்டிற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஆய்வு மையத்தில் அதிகாலை தொடங்கியுள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்வதற்காக EOS -3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோளை விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உருவாகியுள்ளது.

பூமியை துல்லியமாக கண்காணிக்கும் என்பதால் வானில் உள்ள கண் என்று  EOS -3 அழைக்கப்படுகிறது.  EOS -3 செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். 2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் GSLV F - 10 ராக்கெட் மூலமாக நாளை அதிகாலை 5:43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது GSLV ரகத்தின் 14வது ராக்கெட்டாகும்.

இதற்கான கவுண்டவுன் அதிகாலை 3:43 மணிக்கு தொடங்கியது. ‘GSLV F-10’ ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைகோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த EOS -3 செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.


Tags : Earth , Earth observation satellite, 'GSLV F - 10' rocket, countdown
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...