×

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ் குமார் உயர்கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுப்ரியா சாகு சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜோதி நிர்மலாசாமி வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேளாண் துறை செயலராக சமயமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலராக காக்கர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முதன்மை செயலராக கே.கோபால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலராக குமார் ஜெயந்த் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக சந்தீப் சக்சேனா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலராக ஹிதேஷ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

The post தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Chennai ,Dheeraj Kumar ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...