×

வரும் 14ம் தேதி நடக்கிறது மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க, மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 14ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Madimuga District Secretaries' ,Waiko , Madimuga District Secretaries' meeting to be held on the 14th: Waiko announcement
× RELATED எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை,...