சென்னை: சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. அரும்பாக்கம் கான்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் நடந்த சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்றது. எம்.ஆர்.சி நகரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.