சென்னை: எஸ்.பி.வேலுமணியுடன் குற்றம் சாட்டப்பட்ட கே.சி.பி. நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட சந்திரபிரகாஷ் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பட்டியலில் 4வது இடத்தில் சந்திரபிரகாஷ் உள்ளார்.