×

16 மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மங்களூர் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உட்பட 16 பேரை உடனடியாக மீட்கக்கோரி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதம்:  கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபிஷ் என்பவருக்கு சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு 5.5.2021 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பேப்பூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து  16 மீனவர்களுடன் மங்களூர் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.  அந்த  16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும் 4 மீனவர்கள் மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ‘டவ் தே’ புயல் கடந்த பின்பு 16 மீனவர்களை தொடர்பு கொள்ள இயலாமலும் அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன மீனவர்கள் குறித்த தகவல் இதுவரை ஏதும் பெறப்படாதது அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமுதாய மக்களிடையேயும் பெரும் மனத்துயரத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால்,  அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது…

The post 16 மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Minister of Defence of Rescuers ,Chief Minister BC. G.K. Stalin ,Chennai ,Kannyakumari district ,Mangalore ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...