×

வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மயங்கி விழுந்து பலி

புழல்: சோழவரம் அருகே அத்திப்பேடு, ஜி.என்.டி சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (43). விவசாயி. இவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக இருந்தார். இந்நிலையில், இவர் நேற்றுமுன்தினம் மாலை தனது வீட்டின் பாத்ரூமுக்கு சென்றிருக்கிறார். அப்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கால் தவறி தரையில் விழுந்துள்ளார். இதில், வீட்டிலிருந்த உறவினர்கள் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vanniyar Sangam District , Vanniyar Sangam District Secretary fainted and died
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...