×

சூப்பர் மார்க்கெட்டில் 7 லட்சம் கொள்ளை

தண்டையார்பேட்டை: போரூர் ஈஸ்வரன் கோயில் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாகுல் அகமது (48). ராயபுரம் வடக்கு மாதா கோயில் தெருவில் சூப்பர் மார்க்கெட்   நடத்தி வருகிறார். இவர், நேற்று  காலை கடையை  திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த 7 லட்சம் கொள்ளைபோனது தெரிய வந்தது. இதுகுறித்து,   ராயபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அய்வு செய்தனர். அதில் 2 பேர் ந்ளளிரவில் கடையில் நுழைந்து பணத்தை எடுத்து செல்வது பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்….

The post சூப்பர் மார்க்கெட்டில் 7 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Sakul Ahmed ,Borur Iswaran Temple First Cross Street ,Rayapuram North Matha Temple ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...