×

போக்சோவில் பெயின்டர் கைது

புழல்: புழல் கன்னடபாளையம் திருவிக தெருவை சேர்ந்தவர் துரை(50). பெயின்டர். இவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தம்பதியரின் 7 வயது மகளிடம் கடந்த 2 தினங்களுக்கு முன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரையிடம் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியிடம்  துரை சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து, அவரை நேற்று முன்தினம்  போக்சோவில் கைது செய்த போலீசார், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Pokmon , Pokcho, painter, arrested
× RELATED வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது...