×

கொரோனா விதிமுறை மீறல் திரிணாமுல் கட்சியை சேர்ந்த 12 பேர் கைது: திரிபுரா அரசு அதிரடி

அகர்தலா:  திரிபுராவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற வாகனம் மீது பாஜ தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில், திரிணாமுல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் வாகனத்தில் அகர்தலா திரும்பிக் கொண்டு இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் வந்தபோது கோவாயில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்போது  அதனை மீறிய 7 மணிக்கு பயணம் செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அதற்கு  முன்பாக கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து நடந்தது குறித்து விவரம் அறிவதற்காக திரிணாமுல் கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் திரிபுரா விரைந்தனர். கடந்த 2ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிபுரா சென்றபோதும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது பாஜ.வினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Trinamool ,Corona ,Tripura govt , Corona Rule, Trinamool Party, Arrest, Government of Tripura
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை...