×

பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் 81 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.  இந்நிலையில் பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் குட்கா விற்கப்படுவதாக செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீசார் பெரம்பூர் பாக்சன் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தனர். பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை  நடத்தியபோது, ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கிவைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற சோனு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 81 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த இவர், சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குட்கா விற்பனையும் செய்தது தெரியவந்தது. இவருக்கும், குட்கா பதுக்கல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட  சோனுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Perampur ,Northern State , Perambur, apartment, 81 kg, Gutka, confiscated
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...