×

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கேரளத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும் போது விபத்து நேரிட்டது. ஜோசப் குடும்பத்தினர் வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும் வழியில் தவசிப்பாறையில் கார் மீது மினி வேன் மோதியது. காரில் பயணம் செய்த லிஜோ (14), திதீன் (11) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Nelam district , Nellai, car, mini van, 2 killed
× RELATED நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே...