சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட 26 இறைச்சி கடைகளை அகற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூர் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற உத்தரவிடக்கோரிய மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.