குமரி: குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.250க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.200க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.400 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.