புதுச்சேரி: புதுச்சேரியில், கொரோனா 2-வது அலை காரணமாக ஏப்ரல் 23ம்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஒவ்வொரு துறைக்கும் மாநில அரசு தளர்வுகளை அளித்தன. கடந்த வாரம் அளித்த தளர்வின்படி தியேட்டர்களை 6ம்தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, புதுச்சேரியில் நகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் நேற்று செயல்படத் தொடங்கின. ஆனால், பெரும்பாலான தியேட்டர்களில் பழைய திரைப்படங்கள், டப்பிங் படங்கள் மற்றும் ஆங்கில திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. 3 மாதத்திற்குபின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. கிராமப்புறங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளன. சில பராமரிப்பு பணிகளை முடித்து அடுத்தடுத்த நாட்களில் அவையும் திறக்கப்படும் என்று தெரிகிறது.