பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து சிலர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மங்களூரு மாவட்டம், பட்கல்லில் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்கள் மங்களூரு பட்கல்லை சேர்ந்த அபு கசீர் அல் பதாரி, அமீன் ஜூகாப் என்று தெரியவந்தது.
இவர்களில் அபு கசீர், ‘ வாய்ஸ் ஆப் ஹைட்’ என்ற ஐஎஸ். ஆதரவு மாதஇதழில் பணியாற்றி வந்தவர் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலமாக, ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள், நிதி உதவிகளை பெற்று தந்துள்ளார். இதுதவிர ஆப்கானிஸ்தான், சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார்.