×

கர்நாடகாவில் பதுங்கியிருந்த 2 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

பெங்களூரு:   கர்நாடகாவில் இருந்து சிலர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்  தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுவதாக  தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மங்களூரு மாவட்டம்,  பட்கல்லில் பதுங்கியிருந்த 2 பேரை  கைது செய்தனர். அவர்கள் மங்களூரு பட்கல்லை சேர்ந்த அபு கசீர் அல் பதாரி,  அமீன் ஜூகாப்  என்று தெரியவந்தது.

இவர்களில் அபு கசீர், ‘ வாய்ஸ் ஆப் ஹைட்’ என்ற ஐஎஸ்.  ஆதரவு மாதஇதழில் பணியாற்றி வந்தவர் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலமாக,   ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள்,  நிதி உதவிகளை பெற்று  தந்துள்ளார். இதுதவிர ஆப்கானிஸ்தான், சிரியாவில் உள்ள ஐ.எஸ்  தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார்.


Tags : Karnataka , Karnataka, militants, arrested
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!