×

எம்எல்ஏ வீட்டில் வெடிகுண்டு வீச்சு: ஒடிசாவில் 4 பேர் படுகாயம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் எல்எல்ஏ வீட்டின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 4 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கேஷாப்பூர் அடுத்த பாட்டனா ஷாஹியில் ஆளும் பிஜூ ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏ சூரியமணி பைத்யா என்பவரின் வீடு உள்ளது. அதேபோல், நிர்மல்ஜாரில் எம்எல்ஏவுக்கு வாடகை வீடு ஒன்றும் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு எம்எல்ஏவின் வீடு மற்றும் வாடகை வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இரு குழுக்களாக பிரிந்து இரு வீட்டிலும் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம், ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘குண்டு வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை காளிகோட்டை சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தோம். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். எம்எல்ஏ பைத்யாவின் வீடு, இரண்டு பைக்குகள் வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்தன. சம்பவம் நடந்த போது, எம்எல்ஏ வீட்டில் இல்லை. அவர், கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெர்ஹாம்பூர் சென்றிருந்தார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அரசியல் முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

Tags : MLA ,Odisha , Bomb blast at MLA's house: 4 injured in Odisha
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...