லக்னோ: உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்துவரும் பலத்த மழையால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கையில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பல ஆயிரம் பேர் தவித்தது வருகின்றனர். கங்கை கரையை ஒட்டியுள்ள பல ஊர்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேவர முடியாமல் முடங்கியுள்ளனர்.