தஞ்சை: தஞ்சையில் நேற்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று தஞ்சையில் பட்டினி போராட்டம் நடத்தினர். கொரோனா விதியை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.