சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி பாக்கியை 48 மணி நேரத்திற்குள் செலுத்த நடிகர் தனுஷூக்கு அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காருக்கான ரூ.30.30 லட்சம் வரி பாக்கியை செலுத்த உயர்நீதிமன்ற நிதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என நீதிபதி கூறியுள்ளார்.