×

கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: கலெக்டர் வழங்கினார்

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. போக்குவரத்துத் துறை மற்றும் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் நேற்று நேற்று தேனி அருகே குன்னூரில் நெடுஞ்சாலை பயணிகளிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

கலெக்டர் க.வீ.முரளிதரன் தலைமை வகித்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மாத்திரைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது, டிஆர்ஓ ரமேஷ், டிஎஸ்பி முத்துராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாத்துரை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Corona Awareness, Leaflet, Distribution
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை