×

பிளம்பர் கொலை வழக்கில் 8 வாலிபர்கள் பிடிபட்டனர்

ஊத்துக்கோட்டை: திருவண்ணாமலையை சேர்ந்தவர் மதன்குமார் (24). இவர், பிளம்பர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு கிராமத்திற்கு ஒரு தனியாருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை செய்தனர். கடந்த 31ம் தேதி மதன்குமாரும் அவரது நண்பர்கள் அருகில் உள்ள ஏடிஎமில் பணம் எடுப்பதற்காக சென்று திரும்பினர். அப்போது,  மர்ம நபர்கள் அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதில், ஏற்பட்ட தகராறில், மதன்குமாரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியதில் உயிரிழந்தார்.

இதையறிந்த, பூச்சி அத்திப்பேடு வாலிபர்கள், அவரை பூச்சி அத்திப்பேடு கொசஸ்தலை ஆற்றில் போட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், மதன்குமார் கொலை வழக்கில் பூச்சி அத்திப்பேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20), மதன் (25), சிவா (28), புவனேஷ் (22), சந்துரு (27), நாகராஜ் (25), சுனில் (23), கோடுவெளியை சேர்ந்த முருகன் (21) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : In the plumber murder case 8 teenagers were caught
× RELATED 12 ஆங்கில நீதிக்கதைகள் அடங்கிய...