×

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை என ஐகோர்ட் நேற்று தெரிவித்திருந்தது. பொதுநலம் மிக முக்கியம் என்பதால் உரிய விதிமுறைகள் தகுந்த காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுவான காரணங்களை சட்டம் நிறைவேற்றம் போது கூறவில்லை என கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறினார். ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து அவசர கதியில் அ.தி.மு.க. அரசு சட்டம் நிறைவேற்றியது.

அ.தி.மு.க. அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Law Minister ,Raghupathi , Online Rummy, Ban, New Law, Minister Raghupathi
× RELATED பொன்முடி அமைச்சராக தகுதி உடையவர்...