×

நண்பனின் கொலைக்கு பழிவாங்க சிறுவன் உடல் முழுவதும் கத்தியால் கிழிப்பு: 4 பேருக்கு வலை

பெரம்பூர்: நண்பனின் கொலைக்கு பழிவாங்க சிறுவன் உடல் முழுவதும் கத்தியால் கிழித்துவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  ஓட்டேரி பகுதியை சேர்ந்த மதன் என்பவர், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில், ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலையை சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால், கொலையான மதனின் கூட்டாளிகள், இந்த சிறுவனை பழிவாங்க காத்திருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, கீழ்ப்பாக்கம் வரதம்மாள் தோட்டம் பகுதி அருகே இந்த சிறுவன் தனது நண்பருடன் கஞ்சா அடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மதனின் கூட்டாளிகளான ஓட்டேரி பகுதியை சேர்ந்த சீனி (25) உள்ளிட்ட 4 பேர் அங்கு வந்து, சிறுவனை சரமாரியாக தாக்கி, கத்தியால் உடம்பு முழுவதும் கிழித்தனர். சிறுவன் வலி தாங்க முடியாமல் கதறி துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்து, சீனி உள்ளிட்ட 4 பேரும் தப்பினர். படுகாயமடைந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீனி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Boy rips boy's body in revenge for friend's murder: Web for 4 people
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...