சென்னை: ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேர்வழி இயக்கம் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்தள்ளது. இந்திய பார் கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம், பார்மரி கவுன்சிலை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.