சென்னை: தமிழகம் வந்த கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன என நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என கூறினார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.