சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2 சக்கர வாகனங்களை திருடிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்களை திருடிய கும்பல் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகத்தில் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்தூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் போலீசார் 107 இருசக்கர வாகனங்கள், ஒரு டிரக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.