×

எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள்

சென்னை: என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களை ஏமாற்றி, மிரட்டி ஆபாச படங்கள் எடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஷில்பா ஷெட்டி, குழந்தைகள் நலனுக்காக என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:  கடந்த சில நாட்களாக எல்லா பக்கமும் சவால் நிறைந்ததாக இருந்தது.

ஏராளமான வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வந்தன. ஊடகங்களாலும் நண்பர்களாலும் ஆதாரமற்ற தாக்குதல்கள் என் மீது தொடுக்கப்பட்டது. ஏராளமான கேள்விகள், கேலிகள் பதிவிடப்பட்டன. ஆனால் அவை குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து நான் எதுவும் கூறப்போவதில்லை. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதி துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களால் இயன்ற அனைத்து சட்டபூர்வமான வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தாயாக உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதுதான். என் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள், ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை ஆராயாமல் அதுகுறித்து கருத்து கூறாதீர்கள். நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகள். கடந்த 29 ஆண்டுகளாக கடுமையாக உழைக்கும் ஒரு பெண். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களின் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர் இல்லை. சட்டம் தன் கடமையை செய்யட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Shilpa Shetty , Actress Shilpa Shetty
× RELATED புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா...