×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: எம்.பூபதி அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே.டவரில் இன்று(3ம் தேதி செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாநில நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆடம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி, ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், ஐ.சந்திரசேகர், மு.நாகன், பொதுக்குழு உறுப்பினர் வி.சி.ஆர்.குமரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திருத்தணி நகர செயலாளர் வி.வினோத்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். எனவே ஆலோசனை கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது குறித்து துண்டு பிரசாரம் மற்றும் திண்ணை பிரசாரம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Tiruvallur West District ,DMK ,Secretaries Consultative Meeting ,M. Bhupathi , Tiruvallur, DMK Secretaries
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்