×

தீயாய் பரவும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 2.22 லட்சம் பேர் பாதிப்பு, 4,454 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,454 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக  2,22,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,52,447 ஆக உயர்ந்தது.
* புதிதாக 4,454  பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,28,011  ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27,20,716  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இதன் மூலம், நாட்டின் இதுவரை 19,60,51,962 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

The post தீயாய் பரவும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 2.22 லட்சம் பேர் பாதிப்பு, 4,454 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Central Health Department ,Delhi ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...