சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கை டிச.20-க்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை தினமும் விசாரிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.