×

தமிழகத்தில் மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்: கலெக்டரிடம் கமல்ஹாசன் மனு

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவை வந்தார். அவர் இன்று, நாளை என 2 நாட்கள் கோவையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் அவர் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. 2020 ஜனவரி மாதத்திற்கு பின் கிராம சபை கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை.

இதனை மனுவாக அளித்துள்ளோம். மேலும் பட்ஜெட்டில் கிராம சபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும். அடுத்த கிராம சபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதால் தான் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று சில இரங்கல் வீடுகளுக்குச் செல்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Tags : Tamil Nadu , District level Grama Niladhari meeting should be held in Tamil Nadu: Kamal Haasan's petition to the Collector
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...