பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆலத்தூர் கேட் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் 2 வாகனங்களிலும் தீ பிடித்தது. தீ விபத்தில் பைக்கில் சென்ற லாடபுரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் சிறுவர்கள் அஜித், பரணி பலத்த காயம் அடைந்தனர். இருசக்கர வாகனம் மீது கார் மோதி தீ பிடித்தது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.