×

குருநானக் கல்லூரி சார்பில் தரவு பகுப்பாய்வு பயிற்சி: கல்வி நிறுவனம் தகவல்

சென்னை:குரு நானக் கல்லூரி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ்ஜி அவர்களின் 500 வது பிறந்ததினம் நினைவாக குரு நானக் கல்விச் சங்கத்தால் (GNES) 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. குரு நானக் கல்லூரி தென்சென்னை, வேளச்சேரியில் பசுமை நிறைந்த 25 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ளது. குருநானக் கல்லூரியின் உன்னத நோக்கம் சமூக-பொருளாதார பின்புலம், ஜாதி, இனம் அல்லது மதம் பாகுபாடின்றி, அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதே ஆகும். இதை கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் பலன்’ என்ற பொருள் தரும் சீக்கிய பிரார்த்தனை வாசகமான ‘புரோ போனோ பப்ளிகோ’ என்பதே கல்லூரியின் கோட்பாட்டு வாசகமாகும்.

குரு நானக் கல்லூரி எஸ்.ஏ.எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெடுடன் இணைந்து தரவு பகுப்பாய்வில் பி.எஸ்சி., பட்டப் படிப்பை தொடங்கியிருக்கும் சென்னை மாநகரில் முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். எஸ்ஏஎஸ் தங்கள் பட்டத்துடன் சர்வதேச சான்றிதழ் வழங்கும். எஸ்ஏஎஸ் கருவி உலகில் வெற்றிகர முதன்மை 500 நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டில் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி தகவல் தொழிற்நுட்பம் பயிற்சிகளுக்கான தரமான புலத்துறை ஆசிரியர்கள் மற்றும் உலகத்தர கட்டமைப்பை கொண்டிருக்கிறது. கல்லூரியில் பி.எஸ்சி. (சிஎஸ்), பிசிஏ, எம்சிஏ, பி.எஸ்சி.(ஐடி), பி.காம் (ஐஎஸ்எம்) போன்ற பல்வேறு தகவல் தொழிற்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த பயிற்சி பகுப்பாய்வு துறையில் உள்ளகப் பயிற்சி மற்றும் பணியமர்வினை பெறுவதற்கு இளம் பட்டதாரிகளுக்கு வசதியாக அமையும். உயர்ந்த சம்பளத்தில் உலகில் மிகவும் நாடப்படும் தொழில்முறையாளர்களாக திறன்சார் தரவு பகுப்பாய்வாளர்கள் விளங்குகிறார்கள். வர்த்தக வளர்ச்சியை தூண்டுவதற்கு தரவு பகுப்பாய்வுகளை சார்ந்து அனைத்து வகை வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களில் தரவுகளின் தேவை வளர்ந்து வருகிறது. எனவே, தரவு பகுப்பாய்வு என்பது தகவல் தொழிற்நுட்பம் துறையில் மட்டுமின்றி உற்பத்தி, விற்பனை, சுகாதாரநலம், தொலைத்தொடர்பு, வங்கி சேவை மற்றும் நிதி, கட்டுமானம், போக்குவரத்து, ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் பிற அரசு துறைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கிறது.

Tags : Guru Nanak College , Data Analysis Training on behalf of Guru Nanak College: Educational Institution Information
× RELATED குரு நானக் கல்லூரி வளாகத்தில்...