×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்று வந்த ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!: ஆலை நிர்வாகம் அறிவிப்பு

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதால் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என அரசு தரப்பு வாதிட்டது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது எனவும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.


Tags : Thoothukudi , Thoothukudi Sterlite plant, oxygen production, plant management
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...