மதுரை: நெல்லை பேருந்து நிலைய கட்டுமானத்தின் போது ரூ.100 கோடி மதிப்பில் ஆற்று மணல் கடத்தல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை, இந்திய அணு தாதுக்கள் துறை உதவியை சிபிசிஐடி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.