×

தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்!: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்..!!

மதுரை: தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் நிர்வாகம் பொருத்தமான இடத்தை தேர்வு செய்வதுடன் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். எய்ம்ஸ் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தால் மாணவர் சேர்க்கை தொடங்க ஏதுவாக இருக்கும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.


Tags : AIMS ,Government Medical Colleges ,Teney ,Sivangangangang ,Icourt , Theni, Sivagangai, Government Medical College, AIIMS, Icord Branch, Government of Tamil Nadu
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி