×

ஆண்டிபட்டி பகுதிகளில் பப்பாளி வரத்து அதிகரிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால் பப்பாளி வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான கணவாய் மலைப்பகுதி, திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி விவசாயம் நடக்கிறது.

இங்கு விளையும் பப்பாளிகளை தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து விவசாயிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் அடிக்கடி பரவலாக  சாரல் மழை பெய்து வருவதால் பப்பாளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பப்பாளி சாகுபடியும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Andipatti , Andipatti: Farmers are happy with the increase in papaya supply due to heavy rains in the last few days in the surrounding areas of Andipatti.
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி