மதுரை: மதுரை எய்ம்ஸ் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படவில்லை, பால் விலை குறைக்கப்படவில்லை எனவும், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை இதுவரை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.