ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸ் தாக்கப்பட்டதைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு பணியில் ஈடுபட்ட பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.