×

மதுரையில் ஆதரவின்றி உயிரிழந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம்!: போலீசார் வியப்பு

மதுரை: மதுரையில் ஆதரவின்றி உயிரிழந்தவரின் வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம் இருந்ததால் வியப்பு ஏற்பட்டிருக்கிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் இன்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக அங்கிருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவர் வைத்திருந்த பைகள் அனைத்தையும் சோதனை செய்தனர். அச்சமயம் பையில், பழைய பேப்பர்கள் அதிகம் இருந்திருக்கின்றது. அதை தவிர மதுரை மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த பாஸ்புக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆதரவின்றி உயிரிழந்த முதியவர் ராதா என்பதும், அவரது வங்கி கணக்கில் சுமார் 20 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு வங்கியில் இருந்து ரூ.35 லட்சம் பணம் எடுக்கப்பட்டதும் புத்தக கணக்கு மூலம் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற ஊழியர் என்பதும் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இவர் வசித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.


Tags : Madurai , Madurai, Elderly, Bank Account, Rs.20 lakhs
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...