×

நான் பிறந்த நாட்டுக்கு எதிராக விளையாடுவது அற்புத அனுபவம்: நியூசி. ஸ்பின்னர் நெகிழ்ச்சி

இங்கிலாந்தில் வரும் ஜூன் 18 அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய நியூசிலாந்து  அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் உருக்கமாக பேட்டியளித்தார். அதில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடுவது எண்ணி மெய் சிலிர்க்கிறேன். நியூசிலாந்தில் குடியேறிய நான் அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினேன். இப்போது கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆகச்சிறந்த நாடான இந்தியாவுடன், அதுவும் நான் பிறந்த நாட்டுடன், எனது தாய் நாடான நியூசிலாந்துக்கு அணிக்காக விளையாடுவது அற்புதமான அனுபவம்” என அவர் தெரிவித்துள்ளார். …

The post நான் பிறந்த நாட்டுக்கு எதிராக விளையாடுவது அற்புத அனுபவம்: நியூசி. ஸ்பின்னர் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Newsi ,India ,New Zealand ,World Test Championship ,England ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...