×

கெலவரப்பள்ளி பிரதானக் கால்வாய்களில் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறப் பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்குச் சுழற்சி முறையில் நனைப்பு ஒன்றுக்கு 76.23 மில்லியன் கன அடி வீதம் 9 நனைப்புகளுக்கு மொத்தம் 686.07 மி.க.அடிக்கு மிகாமல் 29.07.2021 முதல் 10.12.2021 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்   வட்டத்தில் சுமார் 8000 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.                


Tags : Kelavarapalli , Order to open water in Kelavarapalli main canals for 135 days
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...