×

அம்பத்தூர் பகுதியில் உள்ள மளிகை, பிளாஸ்டிக் கடையில் போதை பொருட்கள் விற்பனை: 2 பேர் கைது

ஆவடி: அம்பத்தூர் பகுதியில் உள்ள மளிகை கடை, பிளாஸ்டிக் கடையில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர். அம்பத்தூர், வெங்கடாபுரம் கே.கே.ரோடு, 7வது தெருவில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்படி, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படை போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு 50 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் அம்பத்தூர் மேனாம்பேடு, பழைய மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி சவுத்ரியை (23) கைது செய்தனர்.


அம்பத்தூர், வரதராஜபுரம், எம்.டி.எச் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ எடையுள்ள குட்கா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான அம்பத்தூர், வரதராஜபுரம், கல்யாணி அம்மன் தெருவை சேர்ந்த அருண்குமாரை (37) கைது செய்தனர். இதுபற்றிய புகாரின்அடிப்படையில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், மணி சவுத்ரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Ambatur , Ambattur, grocery, plastic shop, drug, sale
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...