திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கடந்த வருடம் ஒருவர் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த நாயை காரில் கட்டி இழுத்து சென்றார். இது தொடர்பான புகாரில் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோட்டயம் அருகே அயர்க்குன்னம் பகுதியில் நேற்று சாலையில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பின்னால் ஒரு நாயை கட்டி இழுத்து சென்றதை அந்த பகுதியினர் பார்த்தனர். இதையடுத்து காரை வாகனங்களில் சென்று பிடிக்க முயன்றனர். அதற்குள் கார் வேகமாக சென்று விட்டது.
பின்னர் இதுகுறித்து அயர்க்குன்னம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சியை ஆய்வு செய்தனர். அப்ேபாது காரில் நாயை கட்டி இழுத்து சென்றது உறுதியானது. விசாரணையில் காரை ஓட்டி சென்றது கோட்டயம் அருகே லாக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகுதாமஸ் (22) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் போலீசிடம் கூறியதாவது: தன்னுடைய வீட்டினர் இரவில் நாயை காரின் பின்புறம் கட்டி இருந்தனர். இது தெரியாமல் நான் காரை எடுத்து சென்றதாக கூறினார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.