×

செங்கல்பட்டு அருகே வாலிபர் கொலையில் நண்பர் கைது

செங்கல்பட்டு: உத்திரமேரூர் அடுத்த மானாமதி இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (25). கூலி தொழிலாளி. மனைவி அனிதா. இவர்களுக்கு 4 மாத கை குழந்தை உள்ளது. முரளி மீது உத்திரமேரூர், சாலவாக்கம், காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு அடுத்த அமணம்பாக்கம் இருளர் பகுதியில் உள்ள மாமியார் கன்னியம்மாள் வீட்டிற்கு சென்றார் முரளி. அங்கு கன்னியம்மாள், வெளியூர் சென்றிருந்ததால் வீட்டை திறந்து தங்கியுள்ளார். அப்போது, மீஞ்சூரில் உள்ள தாய்மாமன் தினேசுக்கு (40) போன் செய்து, ‘செங்கல்பட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்துள்ளேன். உன்னை பார்க்க வேண்டும்.

பீர் வாங்கி வைத்துள்ளேன், வா இருவரும் சேர்ந்து குடிப்போம்’ என்று கூறியுள்ளார். உடனே தினேஷும், மதியம் பைக்கில் வந்தார். பின்னர் இருவரும் மது அருந்தினர். இதையடுத்து, தனது நண்பர்களையும் மது அருந்த முரளி அழைத்துள்ளார். அவரது நண்பர்களை பார்த்த தினேஷ், ‘இவர்களை ஏன் அழைத்தாய்’ என்று கேட்டுள்ளார். போதை தலைக்கு ஏறியதும், முரளி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், தினேசை அரிவாளால் கழுத்து, தலை என உடலில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் தினைஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல், வீட்டின் கதவை பூட்டிவிட்டு தப்பி ஓடியது.

நீண்ட நேரமாக கதவு திறக்காததாலும், பைக் மட்டும் வெளியே இருப்பதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வினாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது தினேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அம்மணம்பாக்கத்தை சேர்ந்த முரளியின் நண்பர் பிரசாத் (24) என்பவரை நேற்றிரவு கைது செய்தனர்.

விசாரணையில் முரளி, தினேஷ் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. இவர்களுக்குள் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தினேஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான 2 தனிப்படை போலீசார், முரளி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Tags : Chengalpattu , Friend arrested in youth murder near Chengalpattu
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!