×

பசுமை தாயகம் நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

அம்பத்தூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள், பசுமை தாயகம் நாள் ஆகியவற்றை முன்னிட்டு அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் மரக்கன்றுகள் நடு விழா நேற்று நடந்தது. பாமக துணை பொது செயலாளர் கே.என்.சேகர், வக்கீல் கே.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள், பசுமைத்தாயகம் நாள் ஆகியவற்றை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் நேற்று நடந்தது. பாமக துணை பொதுச் செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர் தலைமை வகித்தார். பசுமைத்தாயகம் மாவட்ட அமைப்பாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். சமூக நீதிப்பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

பாமக மாநில துணை அமைப்பு செயலாளர் என்.அனந்தகிருஷ்ணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.பிரகாஷ், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட துணை செயலாளர் சிவா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் குரு ஏழுமலை, பாபு, அம்பத்தூர் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர்.கே.கோபிநாத், கோடீஸ்வரன், பகுதி தலைவர்கள் சுப்புராஜ், வெங்கடேசன், பகுதி துணைச் செயலாளர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் கொரட்டூர் கோவிந்தராஜ், பாமக, பசுமைத்தாயகம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில், அக்கட்சி நிறுவனர் ராமதாசின் பிறந்தநாள் விழா மற்றும் பசுமைத்தாயகம் நாள் விழா மணவாளநகரில் நடந்தது. மாநில துணைத் தலைவர் வ.பாலயோகி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில நிர்வாகிகள் நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார், வக்கீல் பா.யோகநாதன் பக்தன், மூர்த்தி, தேவநாராயணன், தயாளன், ஏழுமலை, சங்கர், பாலசர்வேஷ், சுப்ரமணி, முகுந்தன், அமுதவல்லி, குணசுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Green Homeland, Sapling Planting Ceremony
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...