பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் உறவினர்கள் (உடல்நிலை பாதிப்பு குறித்து) கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் எங்களால் பரோல் வழங்க முடியும்.
மேலும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி, அதிக நாட்கள் பரோல் கேட்டால் நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் நாட்கள் பரோல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.