×

ரக்கு வாங்கி கொடுத்து அக்கா மகன் வெறிச்செயல் மாமியார் வீட்டில் தாய்மாமன் வெட்டி படுகொலை: செங்கல்பட்டு அருகே பயங்கரம்; 4 பேருக்கு வலை

செங்கல்பட்டு: உத்திரமேரூர் அடுத்த மானாமதி இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முரளி (25). கூலி தொழிலாளி. இவர் மீது உத்திரமேரூர், சாலவாக்கம் உள்பட பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 மாத கைக் குழந்தை உள்ளது. அனிதாவின் தாய் கன்னியம்மாள், செங்கல்பட்டு அடுத்த அமணம்பாக்கம் இருளர் பகுதியில் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று காலை முரளி, அமணம்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். ஆனால், மாமியார் கன்னியம்மாள் வெளியூர் சென்றிருந்தார். இதனால் அவர், வீட்டை திறந்து தங்கினார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள தனது தாய்மாமன் தினேஷுக்கு (40) போன் செய்த முரளி, மாமியார் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், உன்னை பார்த்து, முக்கியமான விஷயம் பேச வேண்டும்.

 உனக்காக ஒரு கேஸ் பீர் வாங்கி வைத்துள்ளேன். நாம் 2 பேரும் குடிப்போம் என கூறியுள்ளார். இதை நம்பிய தினேஷ், நேற்று மதியம் தனது பைக்கில் அமணம்பாக்கம் வந்தார். பின்னர்,  இருவரும் சேர்ந்து மது அருந்தினர். தொடர்ந்து முரளி, தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களையும் மது அருந்த வரவழைத்தார். அதன்படி நணர்பளும் வந்தனர். அவர்களை பார்த்த தினேஷ், ஏன் இவர்களை கூப்பிட்டாய் என கேட்டுள்ளார். அந்த நேரத்தில், போதை தலைக்கு ஏறி இருந்த, முரளி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் ஆத்திரமடைந்து, தினேஷை அரிவாளால் கழுத்து, தலை ஆகிய பகுதகிளில் சரமாரியாக வெட்டினர். இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதை உறுதி செய்த பின்னர், அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தப்பினர்.

இதற்கிடையில், கன்னியம்மாள் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காததாலும், பைக் மட்டும் வெளியே இருப்பதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வினாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தினேஷ், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார், முன்விரோதம் காரணமாக தினேஷ் கொலை செய்யப்பட்டாரா, சொத்து பிரச்னையா, தகராறா, கள்ளக்காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும் போலீசார், தலைமறைவான முரளி மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Raku , Inventory, manslaughter, mother-in-law, mother-in-law, hacked to death
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...