×

அசாம் நிலச்சரிவில் பலி ராணுவ வீரர் உடல் மதுரை வந்தது

அவனியாபுரம்: மதுரை  வில்லாபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் கதிர்வேல் (36). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் அசாமில்  பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல்  விமானம் மூலம் நேற்று  இரவு 9 மணியளவில் மதுரை வந்தடைந்தது. அங்கிருந்து வில்லாபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

Tags : Assam ,Madurai , Assam, Landslide, Kills Soldier
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...